நீதிமன்ற ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது.!!

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் செசன்சு 2-வது நீதிமன்றம் உள்ளது. இங்கு ஊழியராக வேலை பார்த்து வருபவர் காலித் அகமது (வயது 52) இவர் நேற்று நீதிமன்றத்தில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தாராம். இதை நீதிமன்ற ஊழியர் காலித் அகமத் கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் நீதிமன்ற ஊழியரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது . இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசாமியை கைது செய்தார் .விசாரணையில் அவர் கோவை காந்திபுரம் 2 -வது வீதியைச் சேர்ந்த கபாலி என்ற இளமுருகன் என்பது தெரியவந்தது. , இவர் மீது கொலை மிரட்டல் அரசு ஊழியரை பணி செய்து தடுத்தல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.