கோவையில் தொடர் கொள்ளை நடத்திய பிரபல திருடன் கைது – 23 பவுன் தங்க நகைகள் மீட்பு..!

கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்ட பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு. ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை நடந்து வந்தது. இந்த வழக்குகளில் தொடர்புடைய எதிரியை விரைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், உத்தரவின் பேரில்,பேரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டி தலைமையில் காவல் ஆய்வாளர் . வைரம், உதவி ஆய்வாளர் கருப்புசாமி பாண்டியன் மற்றும் போலீஸ்காரர்கள் சந்திர சேகர், சிவசங்கர், நவீன் குமார் ஆகியோர்களை கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.இது சம்மந்தமாக தனிப்படை காவல் துறையினர் குற்றம் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தும் தீவிர வாகன தணிக்கை செய்தும் தேடி வந்த நிலையில் நேற்று நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த ஒரு நபரை சுற்றி வளைத்து விசாரணை செய்தபோது அவர் பேரூர் பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட அசோக்குமார் (வயது 38) என்பதும், அவர் 5 திருட்டு வழக்குகளில் தொடர்புடையதும் தெரியவந்தது.எனவே அந்நபரை கைது செய்து, அவர் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்த 23 சவரன் தங்க நகைகளை தனிப்படை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய எதிரியை துரிதமாக செயல்பட்டு கைது செய்து களவு போன சொத்துக்களை மீட்ட தனிப்படை காவல்துறையினரை கோவை சரக டி. ஐ ஜி .முத்துசாமிபோலீஸ் இரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் பாராட்டினார்கள். வீட்டில் தனியாக இருப்பவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தின் தொலைபேசி எண்கள் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை எண் போன்ற எண்களை தவறாது வைத்திருக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.