7 வயது சிறுமிக்கு சாக்லெட், பிஸ்கட் கொடுத்து பாலியல் பலாத்காரம்- கொடூர சலவை தொழிலாளி போக்ஸோவில் கைது

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 7வயது சிறுமி.அங்குள்ள தொடக்க பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.அங்குள்ள தனியார் தொழிற்சாலை குடியிருப்பில் பெற்றோர்களுடன் வசித்து வருகிறாள். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ரவிக்குமார் ( வயது 44) சலவை தொழிலாளி.திருமணம் ஆனவர்.இவர் 7 வயது சிறுமியை சாக்லெட், பிஸ்கட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தாராம்.இவரது உடலில் இருந்து ரத்தம் வருவதை பார்த்த பெற்றோர்கள் இது பற்றி கேட்டபோது அந்த சிறுமி நடந்ததை கூறினார்.இது குறித்து சிறுமியின் தந்தை செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவுசெய்து ரவிக்குமாரை கைது செய்தனர் .இவருக்கு திருமணம் ஆகி 3 மகள்கள் உள்ளனர். இவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.