பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு.!!

கோவை குனியமுத்தூர் பி .கே.புதூரில் உள்ள மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பாபு .இவரது மனைவி மோகனாம்பிகை ( வயது 37) ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு செல்லும் போது இவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை கழட்டி கைப்பையில் வைத்திருந்தார்..வேலை முடிந்து பஸ்சில் வீடு திரும்பினார். அப்போது இவரது கை பையில் வைத்திருந்த 5பவுன் செயினை காணவில்லை. யாரோ ஓடும் பஸ்சில் திருடிவிட்டனர் .இது குறித்து மோகனாம்பிகை ஆர். எஸ் .புரம். போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.