அப்பப்பா! என்னா வெயிலு ! தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெயில்!

மிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்பதால், மதிய நேரங்களில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளது.

பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சமவெளிப் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவினாலும், மார்ச் 28 முதல் 31 வரை நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் வெப்பத்தின் தாக்கம் 34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கோடை வெப்பத்தைச் சமாளிக்கப் பொதுமக்கள் அதிக தண்ணீர் பருகவும், பருத்தி ஆடைகளை அணியவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்..