கோவை கவுண்டம்பாளையம் , இடையர்பாளையம், பூம்புகார் நகரை சேர்ந்தவர் விஜயன் இவரது மனைவி மோகனபிரியா ( வயது 36 )பெங்களூரில் ஐ.டி.நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவர் கணவர் விஜயனை கடந்த ஆண்டு 2 -வது திருமணம் செய்து கொண்டார். இவரும் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் இடையர்பாளையத்தில் உள்ள வீட்டுக்கு வந்தனர்.நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் கயிற்றை கட்டி மோகனபிரியா தூக்கில் தொங்கியது தெரிய வந்தது.
அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து அவரது தந்தை ராஜேந்திரன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஐ.டி.பெண் இன்ஜினியர் தற்கொலை..







