பனிப் பொழிவின் காரணமாக,பூக்களின் விலை உயர்ந்து, மல்லிகை பூ கிலோ 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் வெயில் நிலவுவதாலும், இரவில் பனிப்பொழிவு காணப்படுவதாலும், பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.குறிப்பாக மல்லிகை மற்றும் முல்லை பூக்கள், மலரும் முன்பே பனியால் கருகி விடுகிறது. இதனால் பூக்களின் உற்பத்தி குறைந்ததால் விலை அதிகரித்து காணப்படுகிறது. தற்போது சபரிமலை சீசன் உள்ளதால், பூக்களின் தேவையும் அதிகரித்து உள்ளது.கோவையில் ஒரு கிலோ மல்லிகை பூ 2,000 க்கு விற்பனையானது.
இது குறித்து வியாபாரிகள் கூறும் போது இந்த விலை உயர்வானது வருகிற பொங்கல் பண்டிகை வரை இருக்கும், அதன் பின்னர் பூக்கள் விலை படிப்படியாக குறையும் என தெரிவித்தனர்.









