கோவை : ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சியாம் சுந்தர ராவ். இவரது மகன் சொண்டி அனில் ( வயது 25) இவர் துடியலூர் என் .ஜி ஜி. ஒ காலனி ,எஸ் .எம் . நகரில் தனது தாயார் சொண்டி ராஜேஸ்வரியுடன் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார் .இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம் . அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக தனது தாயரிடம் அந்தப் பெண்ணின் வீட்டில் போய் பெண் கேட்டு வருமாறு கூறினார் .அதற்கு அந்த காதலியின் பெற்றோர் தனது மகளுக்கு திருமண வயது அடையவில்லை. அதனால் தற்போது திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று கூறினார். இந்த தகவலை அவரது தாயார் தனது மகனிடம் கூறினார் . இதனால் மனம் உடைந்த சொண்டி அனில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் கதவை உட்பக்கமாக தான் போட்டு மின்விசிறியில் தாயாரின் சேலையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவர் தாயார் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
காதலியை திருமணம் செய்ய முடியாததால் காதலன் தற்கொலை..
