கோவை ரத்தினபுரி சங்கனூர் தில்லைநகரை சேர்ந்தவர் மணி. இவரது மகன் மார்ட்டின் பிரபு (வயது 34) .ஏ.சி. மெக்கானிக். இவர் நேற்று நல்லம்பாளையம், கணேஷ் லேஅவுட்டில் வசிக்கும் பிரகாஷ் என்பவரது வீட்டில் ஏ.சி. மிஷின் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார்.. இது குறித்து அவரது மனைவி கிரிஷா கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மின்சாரம் தாக்கி ஏ.சி. மெக்கானிக் பரிதாப பலி..
