கோவையில் ரூ.415 கோடி மதிப்பீட்டில் 860.69 கி.மீட்டர் தூரத்துக்கு சாலை பணிகள் நிறைவு – ஆணையாளர் தகவல்.!

கோவை மாநகராட்சியில் 200 கோடியில் 53 கிலோ மீட்டர் தூரத்துக்கு பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன அதில் 1,937 சாலை பணிகள் 277.13 கி.மீட்டர்தூரத்துக்கு முடிக்கப்பட்டுள்ளது 1,5 19சாலை மேம்பாட்டு பணிகள் சுமார் 226.54 கி.மீட்டர்தூரத்துக்கு நடைபெற்று வருகிறது.

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .அந்த வகையில் கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள மண் சாலைகள் மற்றும் பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்க ரூ. 200 கோடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒதுக்கினார். அதன்படி 3,456 சாலை பணிகள், 503.67 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கொள்ளப்படுகின்றன. அதில் முதல் கட்டமாக 1,937சாலை பணிகள் 277.13 கி.மீட்டர் தூரத்துக்கு நிறைவு பெற்றுள்ளது தற்போது கூடுதலாக 1,519 சாலை மேம்பாட்டு பணிகள் 226.54 கி.மீட்டர் தூரத்துக்கு நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .கோவை மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டம், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் மாநில நிதி குழு சிறப்பு நிதி ஆகிய திட்டங்களின் கீழ் 5, 215 பணிகள் 860.69 கீ.மீட்டர்தூரத்திற்கு ரூ 415கோடி மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. இவர் அவர்கூறினார்.