வடிவேல் பட பாணியில்… பங்குச் சந்தையில் லாபம் பெற இலவச ஆலோசனை… ரூ.5 கோடி மோசடி-14 பெண்கள் உள்பட 43 பேர் கைது..!

புதுடெல்லி: லாபம் பெறு​வதற்​காக பங்குச் சந்​தை​யில் முதலீடு செய்​பவர்​கள் உண்​டு. இதற்​காக அவர்​கள் பல்​வேறு இடங்களிலிருந்​தும் ஆலோ​சனை​ பெறு​வது வழக்​கம்.

இதைப் பயன்​படுத்தி உ.பி.​யின் வாராணசியி​லிருந்து ஒரு கும்​பல் இலவச ஆலோ​சனை வழங்​கு​வ​தாக அறி​வித்​துள்​ளது.

இதற்​காக, அந்த கும்​பல் உ.பி.​யின் வாராணசி​யில் இரண்டு கால்​சென்​டர்​களை​யும் நடத்தி வந்​துள்​ளது. இவர்​கள் காட்​டிய ஆசை வலை​யில் வீழ்ந்​தவர்​கள் தங்​களது வங்கி மற்​றும் டீமேட் கணக்​கு​களின் பாஸ்​வேர்ட் உள்​ளிட்ட அனைத்து விவரங்​களை​யும் கொடுத்துள்​ளனர்.

இந்​நிலை​யில், ஒரு குறிப்​பிட்ட நாட்​களுக்கு மட்​டும் அவர்​களுக்கு லாபம் காட்​டப்​பட்​டுள்​ளது. அதன் பிறகு, அவர்​களை ஏமாற்றி வங்​கியி​லிருந்து தொகைகளை தமது வேறு வங்​கிக் கணக்​கு​களுக்கு மோசடி நபர்​கள் மாற்றிக்கொண்​டனர்.

இதன் பிறகு ஏமாந்த முதலீட்​டாளர்​களின் செல்​போன் எண்​களை பிளாக் செய்​துள்​ளனர்.இது​போல் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் என்​சிசிஆர்​பி​யில் (தேசிய சைபர் கிரைம் புகார் தளம்) தமது புகார்​களை பதிவு செய்​துள்​ளனர். இது​போல் தேசிய அளவில் பதி​வாகும் புகார்​களை தரம் பிரித்து குற்​றச்​செயல்​கள் நடை​பெற்ற மாநிலங்​களுக்கு என்​சிசிஆர்பி அனுப்பி வைக்​கிறது.

இந்த வகை​யில், உ.பி. மாநில காவல் துறைக்கு கிடைத்த 27 புகார்​களின்​படி, மோசடி தளம் வாராணசி​யாக இருந்​துள்​ளது. சுமார் ரூ.5 கோடி தொகை, பங்​குச்​சந்தை முதலீட்​டின் பெயரில் மோசடி செய்​யப்​பட்​டுள்​ளது. இதனால், வாராணசி சம்​பந்​தப்​பட்ட 27 புகார்​களை விசா​ரிக்க அந்​நகரக் காவல் துறைக்கு சைபர் பிரிவு அனுப்​பியது. இதற்​காக வாராணசி காவல் துறை​யின் துணை ஆணை​ய​ரான தமிழர் டி.சர​வணன் தலை​மை​யில் ஒரு படை விசா​ரணை​யைத்துவங்​கியது.

இப்​படை​யினர் நேற்று முன்​தினம், வாராணசி​யின் சிக்​ரா, சேத்​கஞ்ச் ஆகிய பகு​தி​களில் சோதனை நடத்​தினர். அப்​போது 2, 3 அடுக்கு மாடி வீடு​களில் இருந்த 14 பெண்​கள் உள்​ளிட்ட 43 பேர் கைதாகி உள்​ளனர். இந்த சம்பவத்​தில் இது​வரை சுமார் 90 வங்கி கணக்​கு​கள் முடக்​கப்​பட்​டுள்​ளன.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் வாராணசி​யின் துணை ஆணை​யர் டி.சர​வணன் கூறும்​போது, ”இந்த வழக்​கில் மேலும் 200 பேரைத் தேடி வரு​கிறோம். இது​வரை​ ரூ.33 லட்​சம் தொகை வங்​கி​களில் முடக்​கப்​பட்​டுள்​ளது. இந்த கும்​பலின் தலைவனாக, பல்​வேறு விருதுகள் பெற்ற பங்கு சந்தை நிபுண​ரான அம்​பர் மவுரியா உள்​ளார்.

தலைமறை​வான அவரை தேடி வரு​கிறோம். இவர், 2 வருடங்​களாக பங்​குச்​சந்தை பயிற்சி எனும் பெயரில் இளம் பட்​ட​தா​ரி​களுக்கு வலை விரித்துள்ளார். இந்த 27 புகார்​களில் 4 தமிழ்​நாட்​டிலிருந்து செய்​யப்​பட்​டுள்​ளன. இந்தக் கும்​பல், தமிழ்​நாடு, கேரளா உள்ளிட்ட நாட்​டின் பெரும்​பாலான மாநிலங்​களில் மோசடி செய்​து உள்​ளது” என்​றார்.