கோவை ஜூன் 24 கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் கிருஷ்ணம்மாள் வீதியைச் சேர்ந்தவர் சுந்தரன். இவரது மகன் அகில் ( வயது 24) இவர் நேற்று காந்திபுரம் 100 அடி ரோட்டில் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி இவர் மீது மோதியது. இதில் அகில் படுகாயம் அடைந்தார் .சிசிக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்துக் புலனாய்வு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சின்னசாமி ( வயது 42) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி.
