கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை குடியிருப்பு அருகே ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முந்தா மோனிகாதேவி ஆகியோரின் மகள் ரோசினியை சிறுத்தை தூக்கிச்சென்ற சம்பவத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் அருகே உள்ள வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் வனத்துறை சார்பாக வழங்கும் இழப்பீட்டு தொகை ரூபாய் பத்து லட்சத்தில் முன் பணமாக ரூபாய் 50 ஆயிரம் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது சம்பவம் அறிந்த தமிழக முதல்வர் உத்தரவிற்கிணங்க மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆலோசனையின் படி நேற்று விரைந்து வந்த பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் முன்னிலையில் உயிரிழந்த சிறுமியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.அதைத்தொடர்ந்து தமிழக அரசின் வனத்துறை சார்பாக வழங்கப்படும் மீதமுள்ள 9 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீட்டு தொகையை வனத்துறையினர் முன்னிலையில் வழங்கினார்.கொட்டும் மழையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள், வனத்துறையினர் , காவல் துறையினர், வருவாய் துறையினர், எஸ்டேட் நிர்வாகத்தினர், அப்பகுதி நகர் மன்ற உறுப்பினரும் நகர் மன்ற துணைத்தலைவருமான த.ம.ச.செந்தில்குமார், மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறுமியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்