தோட்டத்தில் சிறுத்தை கடித்து 3ஆடுகள் பலி .

கோவை ஜூன் 21 கோவை மதுக்கரை அருகே மாவுத்தம்பதி, மொடமாத்தி தோட்டத்தைச் சேர்ந்தவர் கவுதம். இவர் தனது குடும்பத்துடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஆட்டுப்பட்டிக்குள் புகுந்த ஒரு சிறுத்தைஅங்கிருந்த ஆடு மற்றும் 2 குட்டிகளை கடித்து குதறியது .இதில் அந்த 3 ஆடுகளும் பரிதாபமாக இறந்தது.. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது சிறுத்தை வந்தது உறுதி செய்யப்பட்டால் அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.