கோவை ஜூன் 21 கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவை மாநகரில் போதை பொருள் கடத்துவதையும், விற்பதையும் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் தனிப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக போதைபொருட்கள் விற்பனை வெகுவாக குறைந்து வருகிறது போதை பொருள் வடமாநிலங்களில் இருந்து அனுப்பும் கும்பலை பிடித்துள்ளோம். அத்துடன் போதை பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை போதை பொருட்கள் கடத்தியது மற்றும் விற்பனை செய்து தொடர்பாக மொத்தம் 134 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது .அதில் மொத்தம் 264 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 168 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர 11 ஆயிரம் போதை மாத்திரைகள் ,92 கிராம் கொக்கைன், 54 கிராம் மெத்த பெட்டமைன் , ரு 28 லட்சம் , 32 மோட்டார் சைக்கிள், 7 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்றதாக கைதான 29 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இது தவிர கூரியர் மூலம் போதைப்பொருட்கள் கடத்துவது, ரயிலில் கடத்தி வருவதை தடுக்க தனிப்படையின தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலின் ஆசை வார்த்தையில் மாணவர்கள் சிக்கிவிடக்கூடாது. இவர் அவர் கூறினார்.
கோவையில் கடந்த 5 மாதத்தில் போதை பொருள் விற்ற 264 பேர் கைது.
