மேட்டுப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது. 6 கிலோ கஞ்சா பறிமுதல் .

கோவை ஜூன் 21 கோவைமாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் நேரடி மேற்பார்வையில் பல்வேறு அதிரடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் 3 நாட்கள் (ஆப்ரேஷன் டிரக் ,ப்ரீ) என்ற பெயரில் மாவட்டம் முழுவதும்தீவிர கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது. இதற்காக கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய சுமார் 927 நபர்களின் பட்டியலானது சேகரிக்கப்பட்டது. இந்த பட்டியலில் உள்ள தரவுகளின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்று மேட்டுப்பாளையம் காவல் நிலைய காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் தலைமையில் தாசம்பாளையம் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது .சட்டத்திற்கு விரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜ் மகன் கரிமேடு ஆனந்த என்ற ஆனந்தகுமார் (34),புவனா ஷாகு மகன் மனோஜ் ஷாகு(27)* மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் ராஜ்குமார் (47) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 6 கிலோ கஞ்சாபறிமுதல் செய்யப்பட்டது..இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. இவர்களில் கரிமேடு ஆனந்த் என்ற ஆனந்தகுமார் (34) மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் 10 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது..