போராட்டத்தில் மத விரோத கருத்துக்களை பேசிய 2 பேருக்கு சிறை தண்டனை.

கோவை ஜூன் 17 உத்தர பிரதேச மாநிலத்தில் மாட்டு இறைச்சி ,வைத்திருந்த முகமது அக்லக் என ற முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கடந்த 2015- ஆம் ஆண்டு ஒரு அமைப்பு சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகமும் போராட்டம் நடைபெற்றது .இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ரகமத்துல்லா, நவ்ஷாத் ஆகியோர் மத விரோத கருத்துக்களை பேசியதாகவும், மிரட்டும் தோணியில் பேசியதாகவும் ரேஸ்கோர்ஸ் போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி வெங்கடேச குமார் குற்றம் சாட்டப்பட்ட ரகமத்துல்லா,நவ்ஷாத் . ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ,தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்..