கோவை ஜூன் 17 கோவை சரவணம்பட்டி,சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் .24 மணி நேரமும் கள்ள சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது .இதை யடுத்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் ஆகியோர் நேற்று இரவு அந்த கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து எந்த நேரமும் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குமறைத்து வைத்திருந்த 81 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மது விற்ற பணம் ரூ 4,700 கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பக்கம் உள்ள கடத்தி வயல், இடையூரை சேர்ந்தபார் ஊழியர் முருகநாதன் ( வயது 25) கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
டாஸ்மாக் பாரில் நள்ளிரவில் மது விற்ற ஊழியர் கைது.
