கோவை அருகே மழைக்கு மின்சாரம் தாக்கி 2பேர் உயிரிழப்பு.

கோவை ஜூன் 16 கோவை பேரூர் பக்கம் உள்ள பச்சாபாளையம், ராமர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது 31) கூலி தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (வயது 27) இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகனும் உள்ளனர் இந்த நிலையில் விக்னேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் தீத்திபாளையம் ஓம் சக்தி கோவில் வீதியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். அவர்கள் அங்கு இரவு தங்கினார்.நேற்றுகாலையில் மழை பெய்ததால் வீட்டின் பின்புறம் ஒதுங்கி நின்றுகொண்டுவிக்னேஷ்வரன் செல்போன் பேசிக் கொண்டிருந்தார். ,மேலே மழை நீரை கடத்துவதற்கு தகர சீட் ஒன்றை பொறுத்தி பயன்படுத்தி வந்துள்ளனர்.பின்புறம் மெயின் மின் பாக்ஸ்-ல் இருந்து வீட்டிற்கு மின்லைன் கொடுக்கப்பட்டுள்ளது.இதில் தற்போது மழை பெய்துவரும் நிலையில் அந்த தகர சீட் வழியாக மழைநீர் வழிந்து மின்சாரம் செல்லும் வயர் மீது உரசி வந்துள்ளது. செல்போன் பேசிக்கொண்டிருந்த விக்னேஷ்வரன் எதிர் பாராத விதமாக அந்த தகர சீட்டில் கை பட்டு மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்த அவரது உறவினர் நாகராஜ் மற்றும் அருகில் வசிப்பவர்கள் மின்சாரம் தாக்கியது தெரியாமல் அவர் உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விட்டதாக எண்ணி அருகிலுள்ள மாதம்பட்டி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்ததன் பேரில் இறந்த விக்னேஸ்வரன் உடலை வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டனர். பின்பு நாகராஜ் (வயது 40) அவர் மயங்கி விழுந்த இடத்தில் நின்று மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் அப்போது அவரது கையும் எதிர்பாராத விதமாக தகர சீட்டில் பட்டு மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்துஅதே இடத்தில் இறந்தார்.இது குறித்து பேரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி 2பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.