கோவை ஜூன் 6 கோவை, ராமநாதபுரம் புலியகுளம், ரெட் பீல்டு ரோட்டில் பெட்டி கடை நடத்தி வருபவர் பாக்கியலட்சுமி ( வயது 64) இவரது கடையில் ராமநாதபுரம் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 5 கிலோபுகையிலை பொருட்கள் ( குட்கா ) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பாக்கியலட்சுமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல சிங்காநல்லூர்,நீலி கோணாம்பாளையம், மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் .இவரது மனைவி சுசிலா ( வயது 60 )இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில்சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் நேற்று திடீர் சோதனை நடத்தினார்.அப்போது அங்கு 25 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக மூதாட்டி சுசிலா கைது செய்யப்பட்டார். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
பெட்டிக்கடையில் குட்கா விற்ற 2 மூதாட்டி கைது.
