நீலகிரி மாவட்ட குன்னூர் வட்டம் காட்டேரி பூங்காவில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் முதல்முறையாக கோடை விழாவின் ஒரு அங்கமாக மழை பயிர் காட்சியினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

உதகை- ஜூன்: 1 நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம், காட்டேரி பூங்காவில், கோடை விழாவின்
ஒரு அங்கமாக வேளாண்மை – உழவர் நலத்துறை துறையின் சார்பில் முதலாவது மலைப்பயிர்கள் காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா
தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்,
பின்னர் ஆட்சித்தலைவர் தெரிவித்தாவது : –
மலைகளின் அரசியாம் நீலகிரி மாவட்டம் பல்வேறு சிறப்பு அம்சங்களை
கொண்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை
மகிழ்விக்கும் நோக்கில் பல்வேறு காட்சிகள் தோட்டக்கலைத்துறை மூலமாக
நடத்தப்படுகிறது. இதன் சிறப்பம்சமாக நீலகிரி மாவட்டத்தின் மற்றொரு மகுடமாக
முதன் முறையாக மலைப்பயிர்கள் காட்சி இன்று காட்டேரி பூங்காவில் துவக்கி
வைக்கப்பட்டுள்ளது, இந்த முதல் மலைப்பயிர்கள் காட்சியின் சிறப்பம்சமாக தமிழர்களின் வாழ்வை
பறைசாற்றும் விதமாக கிராமப்புற வாழ்க்கை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தேயிலை,
காப்பி, வெற்றிலை, முந்திரி, தென்னை, பனை, கோகோ, பாக்கு மற்றும் நுங்கு
போன்ற பத்து வகை மலைப்பயிர்களை கொண்டு தமிழ்நாட்டு கிராமப்புற மக்களின்
குடிசை வீடும், வீட்டின் முன் ஆடு, கோழி, கன்றுகுட்டி, அம்மிகல், ஆட்டுகல், உரல்,
பனைமரம் போன்ற உருவ அமைப்புகள் நம் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும்
வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அக்காலத்தில் நம் முன்னோர்கள்
விளையாடிய விளையாட்டுகளான நுங்கு வண்டி மற்றும் சறுக்கு விளையாட்டு
போன்றவை காட்சி படுத்தப்பட்டுள்ளது. மலைப்பயிர்கள் காட்சியினை முன்னிட்டு
தேயிலை பயிரிடும் விவசாயிகளுக்கென பிரத்யேகமாக 4 பிரிவுகளில் போட்டிகள்
நடத்தப்பட்டு நிறைவு நாளன்று பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
மேலும், மலைப்பயிர்கள் காட்சி தொடங்கி வருகிற
01.06.2025 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மற்றும்
பொதுமக்கள் அனைவரும் வருகை புரிந்து இக்காட்சியினை கண்டு ரசிக்குமாறு
மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத் துறையின் மூலம்
கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்,அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தோட்டக்கலை
மற்றும் மலைப்பயிர்களின் துறையின் சார்பில், அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி
அரங்களை பார்வையிட்டார் உடன் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா இ.கா.ப., குன்னூர் சார் ஆட்சியர் செல்வி சங்கீதா இ ஆ .ப., தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷபிலா மேரி, துணை இயக்குனர் நவநீதா, உதவி இயக்குனர்கள் விஜயலட்சுமி, பெபிதா, அனிதா, ஐஸ்வர்யா, ஆகியோர் உடன் இருந்தனர், மற்றும் கடலூர் மாவட்டம் சாரல் கலைக்குழுவினரின் கலை
நிகழ்ச்சிகளை பார்வையிட்டும், தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின்
சார்பில் முதன் முறையாக நடைபெற்ற மலைப்பயிர்களை காட்சியில் மலைப்பயிர்கள்
கொண்டு பல்வேறு உருவங்களை சிறப்பாக வடிவமைத்த கோவிந்தராஜ் மற்றும் குழுவினர்களை (கோவை) அவர்கள், பாராட்டி பொன்னாடை அணிவித்தும்,
காட்டேரி பூங்காவில் நடைபெற்ற முதல் மலை பயிர்கள் காட்சியில் இண்ட்கோ சர்வ் சார்பில் மவுண்டன் ரோஸ் என்ற புதிய ரகம் கொண்ட தேயிலை தூள்
அறிமுகப்படுத்தி, முதல் விற்பனை தொடங்கி வைத்தார்.
இந்த தேயிலை தூளானது 1 கிலோ விலை ரூ.200 மற்றும் அரை கிலோ விலை ரூ.120/- முதல் விற்பனை செய்யப்படுகிறது. பின்னர் கடலூர் மாவட்டம், சாரல் கலை
குழுவினர் சிறப்பாக நடனமாடிய பரதநாட்டியம், கரகம் யோகா, சிலம்பம், ஒயிலாட்டம், கிராமப்புற நடனம் உள்ளிட்ட நடனங்களை ஆடிய மாணவி மோகன சங்கரி அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தாவது:-
அவர்கள் செய்தியாளர்களிடம் நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் முன்பு சிவப்பு நிற அலர்ட்டும் இன்றைய தினம் ஆரஞ்ச் அலர்ட்டும் விடுத்துள்ளது. தொடர்ந்து நாளை தினம், மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், சிம்ஸ் பார்க் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சில சுற்றுலாத் தலங்கள் வானிலை அறிக்கையின் பொருட்டு திறக்கப்பட உள்ளது, நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையினால் உதகை கூடலூர்
செல்லும் சாலையில் உள்ள தவளைமலை பகுதியில் பாறைகள் விழு வாய்ப்பிருப்பதாக
தெரிவிக்கப்பட்டதால் நேற்றைய தினம் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், வாகன போக்குவரத்து தற்போது நடைமுறையில் உள்ளவாறு செயல்படுத்தப்படும். தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டு அடுத்த
கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா இ.கா.ப., குன்னூர் சார் ஆட்சியர் செல்வி சங்கீதா இ.ஆ.ப., தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, துணை இயக்குநர் நவநீதா, உதவி இயக்குநர்கள் விஜியலட்சுமி (சிம் பூங்கா குன்னூர்),
பெபிதா, (உதகை அரசு தாவரவியல் பூங்கா), அனிதா (மண் ஆய்வு கூடம்), ஐஸ்வர்யா (கூடலூர்), குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், விஜயா, தோட்டக்கலை அலுவலர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்,