கோவை மே 9 கோவை குனியமுத்தூர், இடையர்பாளையம் வெங்கட்ராமன் காலனியை சேர்ந்தவர் செய்யது சலீம் ( 59 )இவர் நேற்று குனியமுத்தூர் இடையர்பாளையத்தை சேர்ந்த சுகுமார் ( வயது 30 )என்பவரது ஆட்டோவில் பயணம் செய்தார். இவர் பயணம் செய்த ஆட்டோ பாலக்காடு மெயின் ரோடு சுண்ணாம்பு காளவாய் அருகே சென்றபோது திடீரென்று நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த செய்யது சலீம் தூக்கி வீசப்பட்டார். அவருக்கு பலத்த காயம்ஏற்பட்டது.சிகிச்சைக்காகஅரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்வழியில் அவர் பரிதாபமாக இறந்தார் .இது குறித்து அவரது மகன் இப்ராஹிம் கோவை மேற்கு பகுதி போக்குவரத்துபுலனாய்வு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார் .இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் சுகுமார் ( வயது 30) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
தடுப்புச் சுவரில் ஆட்டோ மோதி பயணி உயிரிழப்பு .
