தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் போர் ஒத்திகை..? தலைமைச் செயலகத்தில் ஆலோசனை.!!

நாடு முழுவதும் நாளை போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ள நிலையில், தமிழக தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எந்நேரமும் இந்தியா பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்க பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு பாகிஸ்தானையொட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த ஒத்திகையை புதன்கிழமை (மே. 7) நடத்துமாறும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, வான்வழித் தாக்குதல் நடந்தால் முன்கூட்டியே பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக பொது இடங்களில் அபாய சைரன் ஒலியை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச்செய்தல் போன்றவை ஒத்திகை செய்யவுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை கல்பாக்கம் அணு மின் நிலையம், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாட தொழிற்சாலை, மணலி பெட்ரோலிய தொழிற்சாலைகளில் போர் ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போர் பாதுகாப்பு ஒத்திகைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகின்றது.