மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு… பழைய பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி..!

குடிமைப் பணியின் போது முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நேரத்தில் எடுக்காவிட்டால் தகுதியற்றவர்கள் ஆகிவிடுவீர்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி குடிமை பணியாளர்கள் முன் தெரிவித்துள்ளார்.

கிண்டி ஆளுநர் மாளிகையில் குடிமைப்பணி தேர்வு எழுத மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் நிகழ்ச்சியில் ஆளுநர் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் முன் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது, ‘குடிமைப்பணி பணியாளர்கள் சில வேளைகளில் தவறாக முடிவுகள் கூட எடுக்க நேரிடலாம் தானும் சில தவறான முறைகளை எடுத்து இருப்பதாகவும் கூறினார்.

மேலும் மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு அனைத்தையும் எதிர்கொள்ள கல்வித்திட்டங்களில் பழைய பாடத்திட்டத்தை மாற்றுவது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.