பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை… பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு – நீதிபதி நந்தினி தேவி இன்று அதிரடி தீர்ப்பு.!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 20 19- ஆம் ஆண்டு நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது தமிழகத்தையே உலுக்கியது. இதை  யடுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் பொள்ளாச்சி டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்தது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்தஅ .தி.மு.க. முன்னாள் நிர்வாகி அருளானந்தம் ( வயது 38) சபரி ராஜன் ( வயது 30) வசந்தகுமார் (வயது 33 )சதீஷ் ( வயது 33) மணிவண்ணன் ( வயது 30) திருநாவுக்கரசு (வயது 30 )ஹெரேன் பால் ( வயது 34 )பாபு என்ற பைக் பாபு ( வயது 38)  அருண்குமார் ( வயது 36) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் அருளானந்தம் பொள்ளாச்சி அதிமுக மாணவரணி செயலாளராக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், ஆள்கடத்தல், அடைத்து வைத்து துன்புறுத்தல், கூட்டு சதி, தடைகள் அழிப்பு, ஆபாச வீடியோ எடுத்தல், ஆபாச வீடியோக்களை பகிர்தல் உள்ளிட்ட 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை மகிளா சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இவர்கள் மீது 2019 ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதன் பிறகு வழக்கு விசாரணை தாமதமானது . அதை தொடர்ந்து ஐகோர்டு உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தீவிர படுத்தப்பட்டது. மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் கடந்த 20 23 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24- ஆம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது .இந்த வழக்கில் சாட்சி விசாரணை அரசு மற்றும் எதிர்தரப்பு இறுதி வாதம் முடிவடைந்தது . இதையடுத்து வழக்கின் தீர்ப்பு இன்று ( செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படும் என்று கடந்த 28-ஆம் தேதி நீதிபதி நந்தினி தேவிஅறிவித்தார்.இந்த நிலையில்நீதிபதி நந்தினி தேவி கரூர் மாவட்ட குடும்ப நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். பொள்ளாச்சி வழக்கு காரணமாக மறு உத்தரவு வரும் வரை அதே கோர்ட்டில் பணியாற்றுவார் என்று ஐகோர்ட்டு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்தது. இதனால் அவர் கோவையிலே தொடர்ந்து பணியாற்றி வந்தார்.இன்று தீர்ப்பு வழங்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் கை தான 9 பேரும் நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது .இதற்காக அவர்கள் 9பேரும் சேலம் சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 10 மணிக்கு கோவை கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டுநீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை இன்று முடிவுக்கு வந்துள்ளது.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி முதலில் அறிவித்தார்.பின்னர் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனையும்,பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் சுரேந்தர் குமார் ஆஜராகி வாதாடினார்.இந்த தீர்ப்புக்கு கோவை மாதர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.