அதிக பாரம் ஏற்றி வந்த 72 லாரிகள் -7 லட்சம் அபராதம்.!!

கோவை மாவட்டத்தில் லாரிகளில் நிர்ணயம் செய்யப்பட்டதை விட அதிக பாரம்(ஓவர்லோடு ஏற்றி செல்லப்படுவதாக கோவை வட்டார் போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 5-ந்தேதி முதல் 31-ந் தேதி வரை கருமத்தம்பட்டி, வாளையார்” உள்ளிட்ட இடங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் .மொத்தம் 802 லாரிகளில் சோதனை நடத்தப்பட்டது .இதில் 72 லாரிகளில் நிர்ணயம் செய்யப்பட்டதை விட அதிக பாரம் ஏற்றி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த லாரிகளுக்கு மொத்தம் ரூ. 7லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தகவலை வட்டார போக்குவரத்து இணை ஆணையாளர் சிவக்குமாரன் தெரிவித்தார்..