70,000 சதுர அடியில் வெள்ளை பளிங்கு கற்களால் ஆன பிரமாண்ட கோயில்… பெரிய மணிகளால் புதிதாக திறக்கப்பட்ட துபாய் இந்துக்கோயில்..!!

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா நேற்று துபாயில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட இந்துக் கோயில்

இந்த கோவில் ஜெபல் அலி வழிபாட்டு கிராமத்தில் அமைந்துள்ளது, இது பல்வேறு நம்பிக்கைகளின் 9 மத கோவில்களை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது. 2012-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட குருத்வாராவை ஒட்டி இந்த புதிய இந்துக் கோயில் அமைந்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சகிப்புத்தன்மை மற்றும் நல் சகவாழ்வு அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் சுஞ்சய் சுதிர் மற்றும் இந்து ஆலய துபாய் அறங்காவலர் ஆகியோர் கலந்துகொண்டு 70,000 சதுர அடி கொண்ட கோவிலை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர். ஐஏஎன்எஸ் அறிக்கையின்படி, இந்த இந்து ஆலயம் துபாய் வழிபாட்டுத் தலத்தைக் கட்டி முடிப்பதற்கு, துபாய் அரசாங்கத்தின் உதவியுடன் 3 ஆண்டுகள் எடுத்தது என்று கூறப்படுகிறது. முன்னரே அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், அடிக்கல் நாட்டு விழாவிற்குப் பிறகு, கோவிட் தொற்றுநோய் காலம் வந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனால் அதன் பிறகு மீண்டும் பணிகள் தொடங்கி தற்போது முடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கட்டுமானப்பணிகளுக்கு இரண்டு வருடங்கள் ஆனது.

இந்த கோயில் குறித்து ட்விட்டரில் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்து இருந்தார். அவரது டீவீட்டில், “இந்த அற்புதமான கோவில் இன்று சுபநேரத்தில் முறையாக திறக்கப்பட்டது என்று நான் நம்புகிறேன். எனது அடுத்த துபாய் பயணத்தில் கண்டிப்பாக இதைப் பார்வையிடுவேன். என்று ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் எழுதியுள்ளார்.

ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு அமைச்சர் மற்றும் @sunjaysudhir துபாயில் புதிய இந்து கோவிலை திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 3.5 மில்லியன் இந்திய புலம்பெயர்ந்தோருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அளித்த ஆதரவிற்கு தூதர் சுஞ்சய் சுதிர் நன்றி தெரிவித்தார்” என்று அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் ட்வீட் செய்தது.

“கோவில் சுவர்கள் வெள்ளை பளிங்கு கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த கோயில் துபாயில் திறக்கப்பட்டுள்ளது இந்திய சமூகத்திற்கு வரவேற்கத்தக்க செய்தி. இது வாழும் மிகப்பெரிய இந்து சமூகத்திற்கு சேவை செய்யும் என்று தூதர் சுதிர் கூறியுள்ளார். ‘துபாயில் புதிய இந்து கோவிலை ஷேக் நஹயன் திறந்து வைத்தது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. கோவிலுக்கு நிலம் வழங்கியதற்காகவும், அதன் கட்டுமானத்தை எளிதாக்கியதற்காகவும் துபாய் அரசாங்கத்தின் கருணை மற்றும் தாராள மனப்பான்மைக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்”, என்று அவர் மேலும் கூறினார்.