கோவை பிச்சனூரில் மின்சாரம் பாய்ந்து 7 வயது சிறுவன் பலி…

கோவை பிச்சனூரில் மின்சாரம் பாய்ந்து 7 வயது சிறுவன் பலி…

கோவை பிச்சனூர் அருகே வாட்டர் ஹீட்டரை பிடிபட்ட 7 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கே.ஜி.சாவடி அடுத்த பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் இவரது மனைவி பேபி, மகன் கிருத்திக் (7). ராமன் கடந்த 3 மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் கிருத்திக் தனது தாயுடன் பாட்டி விட்டில் தங்கி, பிச்சனூர் அரசு பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல பட்டி ராமாத்தாள் வீட்டில் குளிப்பதற்காக தண்ணீர் சூடு செய்ய ஹீட்டர் கருவியை பயன்படுத்தியதாக தெரிகிறது. அப்போது வாட்டர் ஹீட்டர் அருகே கிருத்திக் அமர்ந்திருந்ததாக தெரிகிறது. இதனிடையே ராமாத்தாள் வீட்டிற்கு வெளியே சென்று விட்டு மீண்டும் உள்ளே வந்த போது வாட்டர் ஹீட்டரை பிடித்தவாறு மின்சாரம் பாய்ந்து சிறுவன் கிருத்திக் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதை கண்ட ராமாத்தாள் அங்கிருந்தவர்கள் உதவியுடன் சிறுவனை மீட்டு திருமலையாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு அவரை பரிசோதனைச் செய்த மருத்துவர்கள் சிறுவனின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் மேல் சிகிச்சைக்காக மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக சிறுவனின் தாய் பேபி கொடுத்த புகார் அடிப்படையில் கே.ஜி.சாவடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமன் இறந்து 3 மாதங்கள் ஆன நிலையில் சிறுவனும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.