கணவருடன் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு – பைக் ஆசாமிகள் கைவரிசை.!!

கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள ஈஸ்வர் நகரை சேர்ந்தவர் சித்தநாதன்.இவர் அந்த பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார் .இவரது மனைவி வசந்தகுமாரி (வயது 48. )நேற்று இவர் சலூன் கடைக்கு சென்று இருந்தார். இரவில் சலுனை மூடிவிட்டு கணவர் சித்தநாதனுடன் போத்தனூர் ஈஸ்வரன் நகர் பஸ் ஸ்டாப் அருகே நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி வசந்தகுமாரி கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டான். இது குறித்து சுந்தராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.