கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் 5 பேர் விடுதலை..

கோவை: 75 -வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.இதையொட்டி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதிகள் 5 பேருக்கு சிறப்பு தண்டனை குறைப்பு செய்யப்பட்டது. இதனால் 5 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும் இந்த தண்டனை குறைப்பு நடந்துள்ளது.