கோவையில் தடையை மீறி மது விற்ற 38 பேர் கைது – 490 மது பாட்டில்கள் பறிமுதல்..!

கோவை : குடியரசு தின விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூட அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மீறி கோவையில் பல்வேறு இடங்களில் மறைத்து வைத்து மது விற்பனை நடப்பதாக மாநகர காவல் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் பார்களிலும் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது கடைக்கு வெளியேயும், பார்களிலும் பதுக்கி வைத்து மது விற்பனை செய்ததாக 38 பேர் கைது செய்யப்பட்டனர். 490 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.