கோவையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 23 பவுன் நகை கொள்ளை..!

கோவை குறிச்சி, சுந்தராபுரம், ஜி ஸ்கொயர் முதல் வீதியை சேர்ந்தவர் வேணுகோபால்.இவர் இறந்து விட்டார் .இவரது மனைவி ஸ்ரீகலா (வயது 49)இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் இவர் கடந்த 27 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருச்சூரில் உள்ள அவரது வீட்டுக்கு ஓணம் பண்டிகைக்கு சென்று விட்டார் .நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டில் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ஸ்ரீ கலாபோத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல பீளமேடு தொட்டிபாளையம் பிரிவு ,அத்திகுட்டை சேர்ந்தவர் சின்னராஜ், இவரது மனைவி ராணி( வயது 46 ) இவர் கடந்த 29ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். அவரது கணவரும் வெளியே சென்று இருந்தார். இந்த நிலையில் மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ராணி பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.