கோவை ரயிலில் 20 பயணிகளிடம் துணிகர கொள்ளை.!!

கோவை : கர்நாடக மாநிலம் பெங்களூரு. யஸ்வந்த்பூரில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் கண்ணனூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலையில் 2 மணி அளவில் தர்மபுரிக்கும் – சேலத்துக்கும் இடையே வந்து கொண்டிருநதது. அப்போது ஒரு மர்ம கும்பல் ரயில் மெதுவாக போகும் போது பெட்டிக்குள் ஏறியது. தூங்கிக் கொண்டிருந்த 20 பயணிகளை மிரட்டி அவர்களிடம் இருந்த பொருட்களை கொள்ளையடித்தது.. இதில் பயணிகளின் பணம். நகை, ஸ்மார்ட் போன், செல்போன் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..