கோவை கல்லூரி மாணவரை திட்டிய 2 வடமாநில வாலிபர்கள் கைது..!

கோவை: தேனி மாவட்டம் உத்தமபாளையம், தேவாரம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் அருண்குமார் (வயது 18) ஈச்சனாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ -2 -ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் ஈச்சனாரியில் உள்ள டாஸ்மாக் கடை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக குடிபோதையில் வந்த மேற்குவங்காள வாலிபர்கள் பதால்தாஸ் (வயது 22) ராஜி (வயது 21) ஆகியோர் குடிபோதையில் மாணவர் அருண்குமாரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டினார்களாம்.இதுகுறித்து அருண்குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரையும் கைது செய்தனர் .