165 கிலோ குட்கா பறிமுதல்- கோவை வியாபாரி கைது..!

கோவை சீரநாயக்கன்பாளையம் அருகே ஒரு கோவிலின் பின்புறம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா) பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஆர். எஸ். புரம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று மாலை அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர் .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் பி.என்.புதூரை சேர்ந்த சுந்தரம் ( வயது 55) என்பதும் குட்கா வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. போலீசார் சுந்தரத்தை கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த 165 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.