கோவையில் ஆம்னி வேனுடன் 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் – ஒருவர் கைது..!

கோவை : தமிழ்நாடு காவல்துறை குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை காவல்துறை தலைமை இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் கோவை, சேரன் மாநகர் ராகம் கேக் ஷாப் அருகில் 1500 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்த ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பாபு ( வயது 47) வெள்ளாளப்பட்டி கோவை என்பவரை கோயம்புத்தூர் குடிமை பொருள் வழங்கல் காவல் ஆய்வாளர் மேனகா தலைமையில் உள்ள தனிப்படையினர் அவிநாசி ரோடு நீலம்பூர் லீ மெரிடியன் ஹோட்டல் அருகே வைத்து நேற்று கைது செய்தனர். மேலும் இவர் மீது கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி காவல் நிலையங்களில் 8 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. குறிப்பிடத்தக்கது.