கோவைக்கு சந்தன கட்டை கடத்தி வந்த வாலிபர் கைது – 2 பேர் தலைமறைவு ..!

கோவை சாய்பாபா காலனி சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் நேற்று சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள காமராஜர் வீதியில் ஒரு பேக்கரி அருகே வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது கையில் பையுடன் 3 பேர் நடந்து வந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து விசாரித்தார் . அப்போது 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் 12 சந்தன கட்டைகள் இருந்தது தெரியவந்தது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், டேம் ரோடு, கொம்ப நாயக்கன் பாளையம் ராமசாமி மகன் மாரிமுத்து( வயது 32) என்பது தெரிய வந்தது. தப்பி ஒடிய விஜய், சசிகுமார், ஆகியோரை தேடி வருகிறார்கள்.