2 குழந்தைகளுடன் இளம்தாய் கள்ளக்காதலனுடன் ஓட்டம் – கணவர் போலீசில் புகார்..!

கோவை அருகே உள்ள கே.ஜி. சாவடியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். சமையல் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கணவர் ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.

இளம்பெண் வேலைக்கு செல்லும் போது வாலிபர் ஒருவடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தனர்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது 2 குழந்தைகளுடன் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். மாயமான தனது மனைவி மற்றும் குழந்தைகளை இளம்பெண்ணின் கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து இளம்பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவி மற்றும் குழந்தைகளை கண்டுபிடித்து தரும்படி கே.ஜி. சாவடி போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 குழந்தைகளுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.