கோவை அருகே உள்ள வீரகேரளம் பெரிய தோட்டம் காலனியை சேர்ந்தவர் ஜான்ராஜ் ( வயது 54)இவர் வடவள்ளி, நியூ தென்றல் நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார்.கடந்த 24ஆம் தேதி இரவில் இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்,25 -ம் தேதி இரவு இவரது கடையில் இருந்து புகை வருவதாகபக்கத்தில் வசிக்கும் பாரதி என்பவர் இவருக்கு போன் செய்தார் .வந்து பார்த்தபோது கடை முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அதிலிருந்த ௹6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ஜான்ராஜ் வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மளிகை கடை எரிந்து நாசம், ரூ.6 லட்சம் சேதம் …
