பெண்ணுக்கு கத்திக்குத்து – பக்கத்து வீட்டு வாலிபர் கைது.!!

கோவை கவுண்டம்பாளையம், அசோக் நகரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி பச்சையம்மாள் ( வயது 59) சமையல் வேலை செய்து வந்தார்.முன் விரோதம் காரணமாக இவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜ்குமார் (வயது 23) என்பவர் தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் குத்தினாராம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இது குறித்து பச்சையம்மாள் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..