கடலூர் மாவட்டம்,நெல்லிக்குப்பம் புஷ்பா நகரை சேர்ந்தவர் சவுத்திரி . இவரது மனைவி உமா மகேஸ்வரி ( வயது 41) சம்பவத்தன்று இருவரும் மோட்டார் சைக்கிளில் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஜி.டி .நாயுடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். கோல்டு வின்ஸ் அருகே வேகமாக சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி பின்னால் இருந்த உமா மகேஸ்வரி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. -சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் சில நாட்கள் கழித்து அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசமானது . அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவர் இறந்து விட்டார்.இதுகுறித்து மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி கணவர் சவுத்திரி மீது வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
கணவருடன் பைக்கில் சென்ற மனைவி கீழே விழுந்து பரிதாப பலி..






