கோவை கரும்புக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் நேற்று மாலைஆத்துப்பாலம் மின் மயானம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 100 கிராம் கஞ்சா, 120 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் குனியமுத்தூர் திருவள்ளூர் நகரை சேர்ந்த முகம்மது ஆசிப் என்ற கிக்கானி ஆசிக் (வயது 25) உக்கடம் வின்சென்ட் ரோடு ,முகமத் தாரிக் ( வயது 25) என்பது தெரிய வந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
போதை மாத்திரை, கஞ்சா விற்பனை – இருவர் கைது..!
