ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதை பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ள நிலையில் பாகிஸ்தானை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.கடந்த சனிக்கிழமை மாலை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய மூன்று அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார். நடான்ஸ் மற்றும் ஃபோர்டோ இரண்டும் ஈரானின் முக்கியமான யுரேனியம் செறிவூட்டும் இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அதன்பின் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், அமைதி திரும்பவில்லை என்றால் இன்னும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டினார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் “ஒரு அணியாக” இணைந்து செயல்பட்டதாகவும், ஈரானுக்கு அமைதி அல்லது அழிவு மட்டுமே கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, அமெரிக்காவின் இந்த தாக்குதல்களை சர்வதேச சட்டங்கள், ஐ.நா. விதிகள் மற்றும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று கண்டித்தார். ஐ.நா. விதிகளின்படி, தனது நலன்கள், மக்கள், நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றை காக்க எல்லா வழிகளையும் பயன்படுத்த ஈரானுக்கு உரிமை உண்டு என்று அரக்சி எச்சரித்ததுடன், கடுமையான விளைவுகளும் ஏற்படும் என்று தெரிவித்தார்.ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலை பாகிஸ்தான் கண்டித்ததால், அந்த நாட்டுக்கு எதிராக ஆன்லைனில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று வந்ததுதான்.அமெரிக்கப் பயணத்தின்போது முனீர், ஈரானின் அணுசக்தி மையங்கள் பற்றிய முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம் என்றும், அதனால்தான் உடனடியாக இந்த தாக்குதல்கள் நடந்திருக்கலாம் என்றும் பலர் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரம் இல்லை என்றாலும், இந்த நிகழ்வுகளின் காலவரிசை, பாகிஸ்தானின் நோக்கம் குறித்து ஆன்லைனில் பல விமர்சனங்களையும், சதி கோட்பாடுகளையும் உருவாக்கியுள்ளது.ஈரானில் எங்கெங்கு அணுசக்தி நிலையங்கள் உள்ளன என்பது பாகிஸ்தானுக்கு நன்றாக தெரியும், எனவே பாகிஸ்தான் சொல்லி தான் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு கண்டித்துள்ளது. இதுதான் நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு காரணமாக உள்ளது.ஒரு பக்கம் குழந்தையை கிள்ளிவிட்டு, இன்னொரு பக்கம் தொட்டிலை ஆட்டுகிறது பாகிஸ்தான் என்றும் படமெடுக்கும் பாம்பை கூட நம்பலாம் ஆனால் பாகிஸ்தானை நம்ப கூடாது என்றும் பாகிஸ்தான் தோன்றியதில் இருந்து துரோகம் செய்யும் நாடாகத்தான் இருக்கிறது என்றும் பலர் கடுமையாக விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படமெடுக்கும் பாம்பை நம்பு, பாகிஸ்தானை நம்பாதே.. ஈரான் அணுசக்தி நிலையங்களை அமெரிக்காவுக்கு காட்டி கொடுத்ததா பாகிஸ்தான்? அதிர்ச்சி தகவல்..!
