அச்சுறுத்தும் கொரோனா… மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை- சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு..!

சென்னை: கொரோனா பரவல் எதிரொலி மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவி வருவதால் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் காணொலி காட்சி மூலமும் வழக்குகள் விசாரிக்கப்படும் என உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேரடி மற்றும் காணொலி காட்சி என கலப்பு விசாரணை நடைமுறை ஏப்ரல் 10ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், இந்த வசதியை வழக்கறிஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வழக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்யும் வசதியையும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.