கோவை மாநகராட்சி பகுதியில் ரூ 166.75 கோடி செலவில் 414 கி.மீ. துர சாலைகள் சீரமைக்கும் பணி தொடங்கியது. கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தகவல்.

கோவை ஜூன் 14கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:- கோவை மாநகராட்சியில் உள்ள மண் சாலைகள் மற்றும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ. 200 கோடியை முதலமைச்சர் ஒதுக்கி உள்ளார். இந்த நிதியில் இருந்து 505 கிலோ மீட்டர் தூரத்திற்கு மொத்தம் 3, 676 எண்ணிக்கையிலான சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது .இதில் முதல் கட்டமாக ரூ 52 கோடியே 25 லட்சம் செலவில் 134 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சீரமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. 2 -ம் கட்டமாக ரூ. 114 கோடியே 47 லட்சத்தில் 280 கிலோ மீட்டர்நீளத்திற்கு சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து 3-ம் கட்டமாக ரூ 33 கோடியே 28 லட்சத்தில் 91 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சீரமைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.