கோவை ஜூன் 9 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்வினைய் குமார் (வயது 31) இவரது மனைவி பவித்ரா ( வயது 28) இவர்களுக்கு 2017- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் ,இருவரும் ஈச்சனாரி உள்ள ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தனர்.இந்த நிலையில் கடந்த 1 – ந் தேதி பவித்ரா திடீரென்று மாயமாகிவிட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வினைய் குமார் சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கன்னையன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.
ஐ.டி பெண்இன்ஜினியர் திடீர் மாயம்.
