செந்தூர் ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடித்த இந்திய முப்படை ராணுவத்திற்கு நீலகிரி ரஜினி ரசிகர் மன்றம் வணிகர் சங்க அமைப்பு நிர்வாகிகள் தேசியக்கொடி கையில் ஏந்தி வீரவணக்கமும் நன்றியும் செலுத்தினர்,

உதகை மே 22 நீலகிரி மாவட்ட
ரஜினி நற்பணி மன்றம், மற்றும் அனைத்து சங்கங்கள் இணைந்து பாஜக சார்பாக
உதகையில் இந்தியா ராணுவத்திற்கு வீரவணக்க அணிவகுப்புபேரணி உதகை ஷேரிங் கிராஸ் பகுதியில் இருந்து கமர்சியல் சாலை வழியாக ஏடிசி திடல் வரை பேரணி துவங்கியது,
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு தீவிரவாதிகள் முகாம்களை வேரோடு மண்ணோடு அளித்த
செந்தூர் ஆப்ரேஷன்
செய்த நமது பாரத நாட்டு ராணுவ வீர
புருஷோத்தமர்களுக்கு வீர வணக்கத்தையும்
நன்றியினை காணிக்கையாக்கா செலுத்த தேசிய கொடி ஏந்தி மாபெரும் அணிவகுப்பு பேரணி உதகை சரிங்க கிராஸ் பகுதியிலிருந்து ஏடிசி வரை நடைப்பயணமாக தேசியக்கொடிகளை ஏந்திய படி நடைபெற்றது,
இப்பேரணியில் நீலகிரி மாவட்ட ரஜினி நற்பணி மன்றத்தின் சார்பாக மாவட்டச் செயலாளர்
எஸ் .குமார் தலைமையில் இணைச் செயலாளர் எஸ் ரங்கராஜ் துணைச் செயலாளர் நித்தின் சேகர் செயற்குழு உறுப்பினர்கள் பிரித்தி ரவி, ரித்து கார்த்திக் செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார் விஜயன் மணி ஆரோக்கியநாதன் நஞ்சப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்,
தேசப்பற்று மிக்க அனைத்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஒருங்கிணைந்து பங்கேற்றனர், மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக செயல்படுத்திய இந்தியா முப்படை ராணுவ வீரர்களுக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இப்பேரணி நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியா இடையே ஏற்பட்ட போர் யுத்தம் மூன்று நாட்கள் நீடித்த போது இரவும் பகலுமாக கண்விழித்து தேசத்தை காத்த நமது இந்திய அனைத்து ராணுவ வீரர்களுக்கு நீலகிரி ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் எஸ் குமார் பேரணி நிறைவாக தேசத்தை பற்றியும் இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிறப்புரையாற்றி கோஷங்கள் எழுப்பி வீரவணக்கம் நன்றியும் தெரிவித்தனர், கூட்டத்தில் அனைத்து சங்கங்களின் உறுப்பினர்கள் பொதுமக்கள், பாஜக மற்றும் பாட்டாளி மக்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்,