கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த (03.08.2025) அன்று 6 கிலோ 500 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ரஹீம் மகன் முனீர் (வயது 24) என்பவரை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளியான முனீரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதற்கான உத்தரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவருக்கு வழங்கப்பட்டது.
கஞ்சா வழக்கு குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்..!
