கொட்டி தீர்த்த கோடை மழை… 50 அடிக்கு மேல் உயர்ந்த நீர்மட்டம்.. விவசாயிகள் செம ஹேப்பி.!!

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 50 அடியாக உயர்ந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கிய அணைகளில் ஒன்றாக பாபநாசம் அணை உள்ளது.

இந்த அணை 143 அடி கொள்ளளவை கொண்டுள்ளது. தென் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை தீர்க்கும் முக்கிய ஆதாரமாக இந்த அணை விளங்கி வருகின்றது. கடந்த சில மாதங்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததாலும், கோடை வெயிலால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.

தற்போது பெய்து வரும் கோடை மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் நீர் மட்டமும் உயர தொடங்கியுள்ளது. இதில் நீர்மட்டம் 50.70 அடியாக உயர்ந்தது. மேலும் வினாடிக்கு 766.32 கன அடி தண்ணீர் வருவதோடு அணையிலிருந்து வினாடிக்கு 354.75 பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.