கோயமுத்தூர் மாவட்டம் சூலூரில் சூலூர் கட்டிட பொறியாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. சங்க தலைவராக பொறியாளர் பசுமை நிழல் விஜயகுமார், துணைத் தலைவராக சிற்பி இல.செந்தில் குமார், செயலாளராக தேவானந்தம் பொருளாளர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். சூலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட பொறியாளர்கள் இச்சங்கத்தில் உள்ளனர் இச்சங்கத்தில் புதிதாக 5 பொறியாளர்களை சங்கத்தின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் இணைத்து வைத்தார் நிகழ்ச்சிக்கு உடனடி முன்னாள் தலைவர் பொறியாளர் குமரேசன் வரவேற்பு உரையாற்றினார். பல்லடம் பொறியாளர் சங்கத்தின் தலைவர் செல்வராஜ் புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக சூலூர் வட்டத்துக்குட்பட்ட பேரூராட்சிகளின் தலைவர்கள் தேவி மன்னவன், புஷ்பலதா ராஜகோபால், அரிமா துணைஆளுநர் செல்வராஜ், மற்றும் சங்க ஆலோசகர் சாந்தி செல்வராஜ், அரிமா சிம்ட்டா ரங்கநாதன், கொசினா தலைவர் செவ்வேல் ஸ்ரீ கணேசா குரூப் ஆஃப் கம்பெனி நிறுவனத்தினர், காவிரி குரூப் வினோத் சிங் ரத்தோத் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்களை வாழ்த்தினார்கள். இந்த விழாவில் சமீபத்தில் தாயை இழந்த ஏழை குழந்தைகளின் கல்விச் செலவிற்கும் அரசு பள்ளி பெண்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த கட்டிட நிதி உதவி பேரூராட்சியில் உள்ள பூங்கா இடத்தில் மரங்களை வளர்த்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கோயமுத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் பல்வேறு கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், உற்பத்தியாளர்கள், சங்க உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.